search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    301 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை
    X

    301 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை

    • ஆலங்குடி நாடியம்மன் கோவிலில் 301 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை
    • கூட்டு பிரார்த்தனை, வழிபாடு நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள நாடியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவினையொட்டி நாடியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 301 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கூட்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×