என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
- வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோ மகன் கிருஷ்ணகுமார் (வயது35) இவர் விராலிமலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக கிருஷ்ணகுமார் உயிரிழந்தார்.
இதேபோல் முல்லையூர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பால்ராஜ் (21). இவர் இருசக்கர வாகனத்தில் விராலிமலை- கீரனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். தாயகம் பள்ளி அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்க வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பால்ராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்