search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கிய காட்சி.

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
    • எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி யின் சார்பில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசு கையில், கலைஞர் நூற்றா ண்டு விழாவை ஒரு வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும். அவரது சாத னைகள் மற்றும் எல்லாத்து றையிலும் முத்திரை பதித்ததை நாட்டு மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்ட திற்கி ணங்க வடக்கு மாவட்ட தி.மு.க. விற்குட்பட்ட எல்லா பகுதி களிலும் நலத்திட்ட உதவி களுடன் பல்வேறு நிகழ்ச்சி கள் நடை பெறுகின்றன. ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதனையடுத்து சிறுவர், சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி நடத்தப் பட்டுள்ளது. இந்த போட்டியும் திறமைகள் அதிகம் தேவைப்படுகின்ற விளையாட்டாகும். எந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் முழு மையாக தன்னை ஈடுப டுத்திக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியும், விளையாட்டும் நமக்கு அவசியமானது என்பதை உணர்ந்து எதிர்கால தலைமுறை யின ராகிய நீங்கள் நல்ல பழக்க வழக்க ங்களுடன் எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமை ப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்ப ழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோ க்கிய ராபின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×