search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது
    X

    மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது

    • கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவியை தாக்கிய ஜெய பிரகாசை போலீசார் கைது செய்தனர்

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் டி.கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயபிரகாசுக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. ஜெயபிரகாஷ் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக ஜெயபிரகாசின் மனைவிக்கு தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்டார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ள க்காதலை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய ஜெய பிரகாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×