டவுன், பேட்டை பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

பழையபேட்டை துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.பாரமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Nellai, Power Shutdown, TNEB,
Nellai, Power Shutdown, TNEB,
Published on

நெல்லை:

நெல்லை நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் காளி தாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம்,

சிவந்திரோடு, சுந்திரதெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட், ஏ.பி. மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உசி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com