search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வேகமாக நிரம்பி வரும் குளங்கள்
    X

    கோவையில் வேகமாக நிரம்பி வரும் குளங்கள்

    • வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    இதன் காரணமாக நொய்ய லாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேரூர் படித்துறையை மூழ்கடித்தபடியும், அங்குள்ள தரைப்பாலத்தை தொட்டபடியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கோவை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இதில் நொய்யல் ஆற்றின் மூலம் 25 குளங்கள் தண்ணீரை பெற்று வருகின்றன.

    தற்போது பெய்து வரும் மழையால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக நொய்யல் ஆற்றின் வழியோரம் உள்ள உக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், குறிச்சிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதில் 23 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதிலும் உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன்குளம், செல்வசிந்தா மணிகுளம் முழுவதும் நிரம்பி விட்டது. அதில் இருந்து உபரி நீர் கால்வா ய்களில் வழிந்தோடியது.

    இதுதவிர சொட்டை யாண்டி குட்டை குளம் 70 சதவீதமும், குறிச்சிக்குளம் 40 சதவீதமும், பேரூர் பெரியகுளம், 15 சதவீதமும், நரசாம்பதி குளம் 90 சதவீதமும் நிரம்பின.

    இதே அளவுக்கு வரும் நாட்களிலும் மழை தொடர்ந்தால் அனைத்து குளங்களும் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கனமழையால் கணுவாய்-பன்னிமடையில் உள்ள தாளியூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் சென்றது.

    இப்பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. தடுப்பணை யில் இருந்து சின்னவே டம்பட்டி ஏரிக்கு மழைநீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

    குளங்களையொட்டியும், தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்ல மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறும்போது, கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் படித்துறையை ஒட்டியவாறு மழைநீர் சென்றது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தஅளவுக்கு பெய்யவில்லை. தற்போ தைய வடகிழக்கு பருவமழை காலத்தில் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

    தொடர் மழையால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வருவது விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×