ஓட்டல்களில் தரமான உணவு வழங்க நடவடிக்கை- சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

முதலியார்பேட்டை தொகுதியில் ஓட்டல்களில் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் சம்பத் எம்.எல்.ஏ.,விடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைக்க ஏதுவாக உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு, உணவு பாதுகாப்பு துறை மற்றும் எடை அளவு ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு  சம்பத் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.

கூட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரக்சனாசிங், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன், எடை அளவுகள் துறை ஆய்வாளர் தேவதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் பெட்ரோல், டீசல் அளவீட்டிலும், தரத்திலும் தவறு நடக்காமல் தடுப்பது. 

தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள அசைவ மற்றும் துரித உணவகங்கள், ஓட்டல்களில் பொது மக்களுக்கு தரமான உணவு வழங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது, மளிகை கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் எடையின் அளவு சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது என பல கோணங்களில் விவாதிக்கப்பட்டது.

முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட கடைகள் மற்றும் உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் மற்றும் எடையை சரியாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சம்பத் எம்.எல்.ஏ.,விடம் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக விரைவில் திடீர் கள ஆய்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com