என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில் பெண் போலீஸ் பலி: அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்த வாலிபர் மீது வழக்கு
- அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர் முட்டைக்காடு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த சஞ்சய் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சஞ்சய் மீது அதி வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மிக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
நாகர்கோவில், அக்.13-
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்.தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி உஷா (வயது 39).
இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு அமலேஷ் (7) என்ற மகன் உள்ளான். தற்பொழுது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பணிக்கு வந்திருந்த உஷா இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவரது மோட்டர் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட உஷா படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு உஷா சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்கு பிறகு உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட் டது. அவரது உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினார்கள். பெண் போலீஸ் உஷா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் எது என்பது குறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர் முட்டைக்காடு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த சஞ்சய் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சஞ்சய் மீது அதி வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மிக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்