குளத்தில் மண் திருடிய கும்பலுக்கு வலைவீச்சு

மேலவடகரை குளத்தில் போலீசார் ரோந்து சென்றனர். மண் திருடிக் கொண்டிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டது.
குளத்தில் மண் திருடிய கும்பலுக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் மேலவடகரை குளத்தில் ரோந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு கும்பல் டிராக்டரில் மண் திருடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடி விட்டது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மண் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com