என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேரங்கோடு ஊராட்சியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
- 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
- பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்ட எல்லைகளான பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள், மாநில எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் கொண்டு வரப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதவிர மாவட்டம் நீலகிரி மாவட்டத்திற்குள்ளும் நகர் மற்றும் பேரூராட்சி, கிராம பகுதிகளிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்படி யாராவது பிளாஸ்டிக் பயன்படுத் தினால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீலகிரிக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டும் வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டு உள்ளது. இருப்பினும் சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கேரள எல்லை பகுதியான சேரப்பாடி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளது. மேலும் சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் சாலை ஒரங்களில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. எனவே இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்