search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு

    • கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

    கோவை:

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்டு 23, 24-ந் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவை மாவட்ட தேர்வு மையத்தின் துணைக் குழுத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்டு 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 மணிக்கும் இத்தேர்வில் கலந்துகொள்ள உள்ளது. இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அழைப்பு கடிதம் பெறப்படாதவர்கள் இனையதள முகவரியில் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் தோ்வாணையத்துக்கு விண்ண ப்பம் அளி க்கும்போது, தகவல் ஏற்றம் செய்த சான்றி தழ்களின்அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும். கல்விச்சான்று, ஜாதிச்சா ன்று, விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்று, தமிழ் வழி கற்றலுக்கான சான்று, முன்னாள் ராணுவத்தினருக்கான படையில் விடுவிக்கப்பட்ட சான்று, காவலர் தடையின்மை சான்று ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×