search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும்  முகாம்
    X

    குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காரைக்காலில் 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் முகாம்

    • காரைக்காலில் 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை யொட்டி, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரியை சார்ந்த மாணவர்களுக்கு, 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் மேடுபக்கிரிசாமி உயிர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரராசு, பொதுசுகாதார செவிலிய அதிகாரி மகேஸ்வரி, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள், சுகாதார உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×