search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு  வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி - கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அறிவிப்பு
    X

    தென்காசி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி - கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அறிவிப்பு

    • பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளது.
    • மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கிராம் கன மீட்டர் அளவும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச் சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண் மற்றும் களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவ ட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவி க்கை செய்யப்பட்டு ள்ளது.

    மேலும் தென்காசி மாவட்டத்தில் ராஜ பாளையம் மேல் வைப்பாறு வடிநில கோட்டம் கட்டுப் பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 4 குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக நன்செய் நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புன்செய் நிலங்களை மேம்படுத்து வதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண் பாண்ட தொழில் பயன் பாட்டிற்காக 60 கிராம் கன மீட்டர் அளவும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.

    எனவே இச்சலு கையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாய நிலம் தொடர்பான பட்டா, 10 (1) அடங்கல், சிட்டா, கிரைய பத்திரம் மற்றும் புலப்பட நகல் ஆகிய வற்றுடன் மண்பாண்ட தொழி லாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்று களுடனும் சம்பந்தப் பட்ட தாசில்தார்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×