உலக புகைப்பட தின விழா

உலக புகைப்பட தின விழா நடந்தது போட்டோகிராபர் சங்கத்தின் சார்பில் நடந்தது
உலக புகைப்பட தின விழா
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூரில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையிலும், புகைப்பட கலையை ஊக்குவிக்கும் பொருட்டாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ந் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பெரம்பலூரில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் மணி தேவன் வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகிளும், புகைப்பட ஒளிப்பட கலைஞர்களுமான ஸ்டீபன், தினேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோரது முயற்சியால் பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில அளவில் ஆர்ட் ஆப் நேச்சர் எனும் தலைப்பில் புகைப்பட போட்டி ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடந்தது.

இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இவ்விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர் அருண், அக்ரி மாதவன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com