search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி நாளில் செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில் சிறப்பு பூஜை
    X

    தீபாவளி நாளில் செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில் சிறப்பு பூஜை

    • ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகின்றது.
    • சிறப்பு பூஜையில் குபேரர்-சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கா ரங்கள் மேற்கொ ள்ளப்ப ட்டன.

    பெரம்பலூர்

    தீபாவளி நாளில் குபேரன் மற்றும் லட்சுமி பூஜைகள் நடத்தி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே, குபேர மற்றும் லட்சுமி வழிபாடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

    அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகின்றது.

    கொரோனா தொற்று காலம் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி நாளில் நடைபெற்ற குபேர பூஜைகள் குறைவான நபர்கள் பங்கேற்கும் விதமாகவே நடைபெற்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் குபேரர்-சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கா ரங்கள் மேற்கொ ள்ளப்ப ட்டன.

    இதில் நாணயங்கள், பொன், பொருட்களைக் கொண்டும் குபேரருக்கு சிறப்பு அர்சனைகள் நடை பெற்றன. அதனைத் தொடர்ந்து அன்ன தானமும் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடிட்டர் ஆறுமுகம் தலைமையில் பொறியாளர் ராமலிங்கம், செட்டிக்குளத்தைச் சேர்ந்த மணிக ண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    நாணயங்கள் இலவச விநியோகம் குபேர பூஜையில் வைத்து பூஜிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், நாண யங்கள், நகைகளை வீட்டில் வைத்து குபேர மற்றும் லட்சுமி பூஜைகளை செய்து வந்தால், கஷ்டங்கள் நீங்கி, லட்சுமி கடாட்ஷம் பெருகும். இதனை கருத்தில் கொண்டு, தரிசனத்துக்கு வரும் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட நாணயங்கள் உபய தாரர்கள் மற்றும் பக்தர்களால் ஆண்டு தோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×