search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் சங்க பிரசார கூட்டம்
    X

    தூய்மை பணியாளர்கள் சங்க பிரசார கூட்டம்

    • தூய்மை பணியாளர்கள் சங்க பிரசார கூட்டம் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் அன்பரசு வரவேற்று பேசினார். மாநில செயலாளர் கனி, மாநில தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் ஊதிய உயர்வு வழங்க பணி பதிவேடு, ஊதிய உயர்வு பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். வாரிசு வேலையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது. வட்டாரத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×