search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் வாலிபர் தற்கொலை
    X

    பெரம்பலூர் வாலிபர் தற்கொலை

    • போதைக்கு அடிமையாகி வெளிநாட்டில் வேலை இழந்து ஊர் திரும்பிய பெரம்பலூர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ேவப்பந்தட்டை தாலுக்கா வெண்பாவூர் பிரிவு சாலை பகுதியை சேர்ந்தவர் ராம ராஜ் (வயது 33).இவரது மனைவி மல் லிகா. இவர்களுக்கு ராகவன் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.இந்த நிைலயில் ராமராஜ் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, இறந்தவரின் உறவினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் கூறுகையில்,வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த ராமராஜ், அங்கு போதைக்கு அடிமை யான தோடு சரியாக வேலை க்கு செல்லாமல் இருந்து ள்ளார். இதனால் வேலை செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியு ள்ளது.இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெர ம்பலூர் திரும்பிய அவர், மன விரக்தியில் வீட்டிற்கு செல்ல தயக்க த்தில் தற்கொலை செய்து கொண் டிருக்கலாம் என தெரிய வருகிறது. தற்கொலைக் கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்ற னர்.

    Next Story
    ×