என் மலர்
உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
- அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திருக்கல்யாணம் நடைபெற்றது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18-வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று காலை காத்தவராயன்- ஆரியமாலா திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து வெடி வெடித்தும் , மேள தாளங்கள் முழங்க அருள்மிகு மாரியம்மன் சாமியை திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டு திருஷ்டி பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையம் வந்தடைந்தது.விழாவின் ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர் மேலும் இந்த தேரோட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






