search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே காவல்துறை சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு
    X

    பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே காவல்துறை சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு

    • பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே காவல்துறை சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் முக்கியமான இடமாக உள்ள பகுதிகளில் கோடையின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோரினை எஸ்.பி. வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் எஸ்.ஐ.க்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×