search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் காலை உணவு திட்டத்தில் சமையலர் தேர்வு
    X

    பெரம்பலூரில் காலை உணவு திட்டத்தில் சமையலர் தேர்வு

    • பெரம்பலூரில் காலை உணவு திட்டத்தில் சமையலர் தேர்வு நடைபெற உள்ளது
    • விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்

    பெரம்பலூர்,

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சமையலர்கள் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. சமையலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அதே பகுதியை வசிப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுவில் 3 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் 1 முதல் 5 வரை படிப்பவராக இருத்தல் வேண்டும்.

    குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பழங்குடியின கிராமங்களில் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆண்டிராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும்.மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே ஊராட்சி அளவிலான தேர்வுக்குழுவால் சமையலர் பணி நியமனம் நடைபெறும். மேற்படி, சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழுவிடம் வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் கற்பகம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×