search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

    • பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் செல்லியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிகண்டபுரம், அனுக்கூர், தேவையூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிரம்மதேசம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.



    Next Story
    ×