என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. போராட்டம்
    X

    பா.ஜ.க. போராட்டம்

    • பா.ஜ.க. போராட்டம் நடைபெற்றது
    • தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டமும், பிச்சை எடுத்து தி.மு.க. அரசுக்கு நிதி அனுப்பும் போரா ட்டமும் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் சுரேஷ் பரமசிவம் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார்.

    தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷமி ட்டனர். பின்னர் பட்டியல் அணி பாஜக நிர்வாகிகள் கையில் ஏந்தி பிச்சை எடு த்து திமுக அரசுக்கு நிதி அனுப்பி வைப்பதற்காக நிதியை திரட்டினர்.

    இதில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சை முத்து, மாநில பொதுகுழு உறுப்பினர் அசோகன், பொது செயலாளர் முத்த மிழ் செல்வன், நகர தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் வரவேற்றார். முடிவில் ஓபிசி மாவட்ட பொதுசெயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×