என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது - அமைச்சர் தகவல்
- மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகள்
பெரம்பலூர்:
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலன்காக்கும் மகத்தான அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்கின்றது. மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவற்றிற்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்தி செயல்படவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பெரம்பலுார் மாவட்டத்தில் மக்களின் தேவை அறிந்து அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முடிவுற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், பெரம்பலுார் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப்பையன், செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமாந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பெரு. கருப்பையா , ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், அசூர் செல்வி முருகேசன்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.






