search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலில் புகுந்து பொருட்களை அடித்து ெநாறுக்கிய கும்பல்
    X

    அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலில் புகுந்து பொருட்களை அடித்து ெநாறுக்கிய கும்பல்

    • பெரம்பலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலில் புகுந்த மர்மகும்பல் பொருட்களை அடித்து நொறுக்கியது
    • வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாமுண்டிதுரை (வயது 39). இவரது மனைவி பிரியா. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

    மாமுண்டிதுரை கல்பாடி பிரிவு சாலை அருகே ஓட் டல் வைத்து நடத்தி வருகி றார்.இந்த நிலையில் தீபாவளி அன்று அதிகாலையில் மாமுண்டி மற்றும் பணியா ளர்கள் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல், தங்களது முகத்தை துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, ஓட்ட லுக்குள் புகுந்தது.இவர்களை பார்த்த மாமுண்டிதுரை மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சி யடைந்து அவர்களை யார் நீங்கள்? எதற்காக முகத்தை மூடியுள்ளீர்கள் என்று கேட்டனர்.ஆனால் அந்த கும்பல் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகள், டி.வி. ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    இந்த சம்பவம் குறித்து மாமுண்டிதுரை பெரம்ப லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு ெசய்த போலீ சார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.இந்த சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா? என பல்வேறு கோண ங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஓட்டலில் புகுந்து பொருட்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைராலாகி வருகிறது.

    Next Story
    ×