search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
    X

    சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்கும் பணி நடந்தது.

    மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

    • போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
    • மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும், மகா்நோன்புசாவடி பழைய ராமேஸ்வரம் சாலையில் தலா ஒரு மாடு, கன்றையும், யாகப்பா நகரில் 2 மாடுகளையும், சிவகங்கை பூங்கா, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும்,

    மருத்துவக் கல்லூரி சாலையில் 4 மாடுகளையும், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் தலா ஒரு மாடு, கன்றையும் என மொத்தம் 18 மாடுகளையும், 2 கன்றுகளையும் மாநகா் நல அலுவலா் சுபாஷ்காந்தி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் பிடித்து, காப்பகத்துக்கு கொண்டு சென்று, அவற்றின் உரிமையா ளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

    மாநகரில் இதுவரை 71 மாடுகளையும், 44 கன்றுகளையும் பிடித்து அபராதம் விதித்துள்ள தாகவும், சாலைகளில் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணி தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.

    Next Story
    ×