search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில்  பிடாரி அம்மன் வீதி உலா
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவையொட்டி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிடாரி அம்மன் வீதி உலா

    • திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை( 25- ந்தேதி) பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்ததோடு, எல்லைக்கட்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முக்கிய விழாவான பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×