search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேரம் வரும்போது அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்- பண்ருட்டி ராமச்சந்திரன்
    X

    நேரம் வரும்போது அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்- பண்ருட்டி ராமச்சந்திரன்

    • ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓபிஎஸ்.
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைதனமானது. தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும்.

    ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓபிஎஸ். அதிமுகவை சீர்குலைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனர்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்துக்கொடுத்த சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். இனி இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்தையும் விட்டுக்கொடுத்தோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை.

    மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். நமக்கான நேரம் வரும்போது, அதிமுகவை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×