search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள்.

    ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

    • ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
    • முதல்-அமைச்சருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம் நாளை தொடங்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஊராட்சி செயலாளர் சங்கத்தின் கோரிக்கைகளான ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் சம்பளம் வழங்கிடவும், ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் 10 ஆயிரமாக உயர்த்திடவும், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், ஓய்வூதிய தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்திடவும், தூய்மை பணியாளர்களின் ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழியர்களை அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் பணி செய்ய நிர்பந்திப்பது, இரவு நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் அவசரப் பணி என்ற பெயரில் பணிகளை செய்ய வைப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம் நாளை தொடங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் கசாலி மரக்காயர், ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் மாரிக்கனி, பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், வேலுச்சாமி, சிவபெருமாள், பாஸ்கர், முத்துராஜ், ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×