search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமலைச்செடிகள் - கட்டிடக்கழிவுகளால் கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கும்  பாளையங்கால்வாய்
    X

    தண்ணீர் தெரியாதபடி அமலைச்செடிகளால் சூழப்பட்டுள்ள பாளையங்கால்வாய்.

    அமலைச்செடிகள் - கட்டிடக்கழிவுகளால் கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கும் பாளையங்கால்வாய்

    • பாளையங்கால்வாய் மூலம் 3 ஆயிரத்து 844 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் பாளையங்கால்வாய் 42.46 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த கால்வாய் மூலம் நேரடியாகவும், அதனுடன் இணைந்துள்ள 57 குளங்கள் வாயிலாகவும் 3 ஆயிரத்து 844 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பொதுமக்கள் புகார்

    வருடாந்திர பராமரிப்பு பணி என நிதி ஒதுக்கி இந்த கால்வாயை நெல்லை மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது பராமரித்து வருகிறது. எனினும் பணிகள் முழுமையாக நடைபெறுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதில், குறிப்பாக மேலப்பாளை யம் பகுதியில் உள்ள பாளை யங்கால்வாயை அமலை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. அந்த கால்வா யில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல தேவையான நீரோட்டமின்றி பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    கழிவுநீர்

    மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்படுவதால் கழிவுநீர் கால்வாய் போல் காட்சி அளிக்கிறது. குப்பைகள், கட்டிடக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் கால்வாய் அழியும் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தின் தொன்மையான பளையங்கால்வாய் பாழாகி வருவதாகவும், இதனை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×