search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே  ெபண் கொலையில்  பெயிண்டர் கைது  மலையில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்
    X

    கைதான மாது

    சேலம் அருகே ெபண் கொலையில் பெயிண்டர் கைது மலையில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்

    • பழனியம்மாளுக்கும், மாதுவுக்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வந்தது.
    • மேலும் பழனியம்மாளை கீேழ தள்ளி விட்டு அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்தார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தும்பிப்பாடி அருகே உள்ள ரெட்டியூர் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 52). இவர்களுக்கு கந்தசாமி, சண்முகம், கார்த்திக் என்ற 3 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் இறந்து விட்டார்.

    இதனால் பழனியம்மாள் தனது வீட்டிலேயே காய்கறி வியாபாரம் செய்தும், மற்றும் ஆடுகள் மேய்த்தும் மகன்களை வளர்த்தார். தொடர்ந்து 2 மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 3-வது மகனுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. 3 மகன்களும் வெளியூரில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வருகின்றனர்.

    பழனியம்மாளின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாது (வயது 37). பெயிண்டர். இந்த நிலையில் பழனியம்மாளுக்கும், மாதுவுக்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வந்தது.

    இதனால் மாது கடந்த 1-ந்தேதி இரவு குடித்து விட்டு வந்து பழனியம்மாளிடம் தகராறு செய்தார். மேலும் பழனியம்மாளை கீேழ தள்ளி விட்டு அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்தார். பின்னர் மாது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    மலை பகுதியில் பதுங்கி இருந்தார்

    இந்த கொலை சம்பவம் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாது பற்றி ரெட்டியூர் காலனி மக்களிடம் விசாரித்தனர். போலீசாரிடம் அப்பகுதி மக்கள் கூறுகையில், மாது அடிக்கடி குடித்துவிட்டு ஊரில் உள்ள பலரிடம், தொடர்ந்து இதுபோல் பிரச்சினை செய்து வருகிறார். அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தால் தான் இப்பகுதியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றனர்.

    இதையடுத்து தலைமறைவான மாதுவை பல்வேறு இடங்களில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சேரி மலையடிவாரத்தில் மாது பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் காஞ்சேரி மலையடிவாரத்தில் விரைந்து சென்று மாதுவை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    கைதான மாது ஏற்கனவே திருமணம் ஆனவர். குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் கண்டித்தனர். ஆனாலும் மாது கேட்கவில்லை.

    கணவரின் நடத்தை சரியில்லாததால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். தற்போது அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. ைகது செய்யப்பட்ட மாதுவுக்கு கொேரானா இருக்கிறதா? என ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×