search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சத்திரம் அருகே  கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
    X

    புதுச்சத்திரம் அருகே கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

    • 10ம் தேதி இரவு, அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கடலூர்:

    புதுச்சத்திரம் அருகே, கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; பஹ்ரைனில் வேலை செய்து வருகிறார். ஊருக்கு வந்திருந்த அவரை, மீண்டும் வெளிநாடு செல்வதற்காக, கடந்த 10ம் தேதி இரவு, அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். பின்னர் காரில் ஊர் திரும்பிக் கொண்டிதிருந்தனர். காரை தரங்கம்பாடியை அடுத்த கீழப்பெரும் பள்ளம் சத்தியசீலன் (38) ஓட்டினார். கார் கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கொத்தட்டை பஸ் நிறுத்தம் அருகே, வந்தபோது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டிரைவர் சத்தியசீலன், சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் படுகாயமடைந்த கார்த்திகேயன் மனைவி வளர்மதி (30) மகன் ஹரிஹரன்(10) வளர்மதியின் தங்கை வனிதா (29) தாய் வெண்ணிலா(60) வனிதாவின் ஆறு மாத குழந்தை விக்ராந்த், வளர்மதியின் தம்பி வளர்ச்செல்வனின் மூன்று மாத குழந்தை லக்க்ஷனா ஆகியோரை மீட்டு, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், விக்ராந்த், லக்க்ஷனா இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர். வளர்மதி, ஹரிஹரன் ஆகியோர் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×