search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாநாட்டையொட்டி ஓசூரிலிருந்து, வெற்றி ஜோதிதொடர் ஓட்டம்
    X

    அ.தி.மு.க. மாநாட்டையொட்டி ஓசூரிலிருந்து, வெற்றி ஜோதிதொடர் ஓட்டம்

    • இந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டமானது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்றடைந்து.
    • வருகிற 20-ந்தேதி மதுரையில் நடை பெறவுள்ள மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜோதி ஒப்படைக்க படவுள்ளது.

    ஓசூர்,

    மதுரையில், வருகிற 20ந் தேதி அதி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வெற்றி ஜோதி தொடர் ஓட்டம் நடைபெறுகிறது.

    இதனை, ஓசூரில் நேற்று கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி, துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல். ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மேலும் இதில், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர். வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் நாராயணன் மற்றும் வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டமானது, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்றடைந்து.

    பின்னர் வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜோதி ஒப்படைக்க படவுள்ளது.

    Next Story
    ×