search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நெல்லையில் இன்று மாலை சொக்கப்பனை தீபம் ஏற்றம்
    X

    டவுன் சொக்கப்பனை முக்கில் பூஜைகள் நடத்தப்பட்டு சொக்கப்பனை வைக்கப்பட்டுள்ளது.

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நெல்லையில் இன்று மாலை சொக்கப்பனை தீபம் ஏற்றம்

    • திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • இன்று மாலை சுவாமி நெல்யைப்பர்-காந்திமதியம்மாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.

    நெல்லை:

    திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    சிறப்பு பூஜைகள்

    இதையொட்டி சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மகாஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று மாலை சுவாமி நெல்யைப்பர்-காந்திமதியம்மாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.

    சொக்கப்பனை

    தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு மகா ருத்ரதீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் பாரதியார் தெரு அம்மன் சன்னதி முகப்பில் கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.

    அதுபோல நெல்லை மாநகர பகுதியில் உள்ள தச்சநல்லூர் நெல்லையப்பர் கோவில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் இன்று இரவு சிறப்பு தீபாராதனை மற்றும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது.

    Next Story
    ×