search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

    • அங்கம்மாள் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார்.
    • சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 75). இவர் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர். மூதாட்டி அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×