search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளம் அருகே முதியவர் திடீர் சாவு
    X

    கூடங்குளம் அருகே முதியவர் திடீர் சாவு

    • இவர் ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வந்துள்ளார்.
    • நேற்று அவர் கூடங்குளம் அருகே உள்ள திருவம்பலபுரம் பகுதியில் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    மதுரை மாவட்டம் செல்லூர் இருதய ராஜ்புரத்தை சேர்ந்தவர் செய்யது அகமது அலி(வயது 57). இவர் ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அவர் கூடங்குளம் அருகே உள்ள திருவம்பலபுரம் பகுதியில் இறந்து கிடந்தார்.

    இதுதொடர்பாக விஜயாபதி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் கூடங்குளம் போலீசார் விரைந்து வந்து செய்யது அகமது அலி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×