search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் முதியவர் தற்கொலை
    X

    காஞ்சிபுரத்தில் முதியவர் தற்கொலை

    • தனபால் தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார்.
    • 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 60). தறித்தொழில் மற்றும் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 5 மகள்கள் பிறந்து 2 மகள்கள் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். 3 மகள்களில் 2 மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசிப்பதால் இவர்களுடன் தொடர்பில் இல்லை.

    ஒரு மகள் மட்டும் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனிமையில் விரத்தியான மனநிலையில் இருந்த தனபால் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வாசலில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×