search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.பி.எல். கிரிக்கெட் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி
    X

    கிரிக்கெட் போட்டி நடந்த போது எடுத்த படம்.

    என்.பி.எல். கிரிக்கெட் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி

    • அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ்-ரிதம் நிட் இந்தியா அணியும்,
    • இரண்டாவதாக நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சி.ஆா்.காா்மெண்ட் ஈகிள்ஸ்-எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணிகளும்

    திருப்பூர்:

    திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களுக்கான என்.பி.எல். (நிஃப்ட்-டீ பிரிமியா் லீக்) கிரிக்கெட் போட்டிகள் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ், ரிதம் நிட் இந்தியா அணிகள் ஏற்கெனவே வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில் மற்ற இரண்டு அணிகளை தோ்வு செய்வதற்கான காலிறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சி.ஆா்.காா்மெண்ட்ஸ் ஈகிள்ஸ்-குவாண்டம் நிட்ஸ் -3 (கே.பி.ஆா்.) அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த சி.ஆா்.காா்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இரண்டாவது ஆடிய குவாண்டம் நிட்ஸ் -3 (கே.பி.ஆா்.) அணி 15.2 ஓவா்களில் 73 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சி.ஆா்.காா்மெண்ட் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் - சி.ஆா்.காா்மெண்ட் டைகா்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய சி.ஆா்.காா்மெண்ட்ஸ் டைகா்ஸ் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இதையடுத்து, ஜூலை 2 -ந் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ்-ரிதம் நிட் இந்தியா அணியும், இரண்டாவதாக நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சி.ஆா்.காா்மெண்ட் ஈகிள்ஸ்-எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

    Next Story
    ×