search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுகள் கலந்து மாசுடன் காணப்படும் நொய்யல் ஆறு
    X

    20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுகள் கலந்து மாசுடன் காணப்படும் நொய்யல் ஆறு

    • தீர்வு கிடைக்குமா? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
    • நொய்யலாற்றுக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை யொட்டிய அடிவாரத்தில் சாடிவயல் என்ற பகுதியில் இருந்து சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது.

    அங்கு உருவெடுத்து சமவெளி பகுதியாக செல்லும் நொய்யாலானது கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு வழியாக சென்று கரூர் அருகே உள்ள நொய்யல் என்ற கிராமத்தில் கலந்து காவிரியுடன் சங்கமம் ஆகிறது.

    சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நொய்யாலானது பயணிக்கி றது. இவ்வளவு கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கும் ஒரே ஆறு என்ற அருமை நொய்யலாற்றுக்கே உள்ளது. இந்த நதிக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.

    மழைக்காலங்களில் இந்த ஆற்றின் வழியாக காட்டா ற்று வெள்ளம் பெரு க்கெடுத்து ஓடும். இந்த நொய்யல் ஆற்றை சுற்றிலும் 32 அணைக்கட்டுகளும் 40-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. இவை அனைத்தும் நொய்யல் ஆற்றை சார்ந்தே இருக்கிறது.

    மேலும் இந்த நொய்யல் ஆறு பயணிக்க கூடிய கிராம ஆற்றுப்படுக கைகளிலும் தடுப்பு அணை களும் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் மூலம் நொய்யல் ஆறு செல்லும் வழியில் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்களும் பயன் அடைந்து வருகிறது. இதுதவிர குடிநீருக்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இப்படி பல்வேறு சிறப்புகளுடன், மக்களுக்கு பயனளித்து வந்த நொய்யல் ஆறு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுகள் கலந்து மாசற்று கிடக்கிறது. நொய்யல் ஆற்றில் தற்போது, தண்ணீர் நுரையுடன் செல்வதை காண முடிகிறது. போதிய மழை இல்லாததால் ஆறும் வறண்டு காணப்படுகிறது. அப்படியே தண்ணீர் வந்தாலும் அதனை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

    நொய்யல் ஆற்றை காப்பாற்றும் விதமாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். ஆனாலும் கழிவுகள் ஆற்றில் கலந்து கொண்டு தான் இருக்கிறது என கூறுகின்றனர் விவசாயிகள்.

    நொய்யல் ஆறு தொடங்கிய பகுதியில் சிறிது மாசு ஏற்பட்டாலும் ஆறு செல்ல செல்ல கோவையின் புறநகர் பகுதியில் உள்ள சூலூர், சாமளாபுரம், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் முழுவதுமாக சாக்கடையாக மாறிவிடுகிறது. அதேபோல இதனை சார்ந்துள்ள குளங்களும் சாக்கடை நீர் நிறைந்ததாகவே காணப்டுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கான நீர் ஆதாரமாகவும் நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் எங்களால் விவசாயமும் செய்ய முடியாத நிலையே உள்ளது. பலமுறை விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மாசு கட்டுப்பாட்டு வா ரியம், பொதுப்பணித்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    மேலும் தற்போது உள்ள காலகட்டத்தில் குளத்தில் தண்ணீர் இருந்ததா என வருங்கால சமுதாயம் கேட்கும் நிலை உருவாகும். நொய்யல் ஆற்றில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் விட வேண்டும். அதற்கான சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் அதுவே இதற்கான தீர்வு எட்ட முடியும் அவ்வாறு அமைத்தால் மட்டுமே கொங்கு மண்டலத்தை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் கொங்கு மன்ற த்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகும்.

    எனவே அரசு நொய்யல் ஆற்றை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    இது குறித்து பேசிய ஆறுகள் பாதுகாப்பு மற்றும் கவுசிகா நதி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த செல்வராஜ் கூறும்போது, சூலூர் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவை இந்த நீர் நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மை உடையதா கவும், தென்னை மரங்களில் தென்னை காய் காய்க்கக்கூடிய அளவில் கூட இல்லை. அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வில் பயன்ப டுத்தக்கூடிய நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது உப்புத்தன்மை நிறைந்ததாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×