வடமாநில தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

2 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.வீட்டிற்கு பணம் அனுப்ப முடி யாமலும், காலுக்கு செருப்பு வாங்கி அணிய முடியாமலும் பரிதவித்து வருகிறார்கள்.
 போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
 போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
Published on

பாலக்கோடு,

கொச்சின் முதல் பெங்களூர் வரை கேஸ் குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.

தற்போது தருமபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குழாய் பதிக்கும் பணி பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி பகுதியில் நடைபெற்று வருகிறது.

பீகார், ஒரிசா, உத்தரபிர தேசம் உள்ளிட்ட வட மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் இப்பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

கெயில் நிறுவனம் கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் தங்களுடைய வீட்டிற்கு பணம் அனுப்ப முடி யாமலும், காலுக்கு செருப்பு வாங்கி அணிய முடியாமலும், மேலும் தங்களுடைய அடிப்படை தேவை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத கெயில் நிறுவனத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com