நிபா வைரஸ்: கேரள எல்லையில் பழங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி

சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி.இரவிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிபா வைரஸ்: கேரள எல்லையில் பழங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி
Published on

செங்கோட்டை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அண்டை மாநில சோதனை சாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதனால் கேரளாவில் இருந்து வரும் நபர்கள் முறையான சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது அரியவகை பழங்களான ரம்பூடான், மங்குஸ்தான் உள்ளிட்ட சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி செய்யப்படுவதால் சோதனை சாவடியில் வைத்து அவற்றை சுகாதாரத்துறையினர் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதன்பின்னரே அதனை குற்றாலத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.

அந்த பழங்களில் வவ்வால்கள் கடித்து சேதமாகி இருந்தால், அதனை அப்படியே வாகனத்தில் கேரளாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com