குன்னூரில் டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி டேன் டீ தொழிற்சங்கம் சார்பில் குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஊட்டி:

டேன் டீ தோட்டத் தொழி லாளர்களின் குறைந்தபட்ச ஊதிய இறுதி அரசாணையை உடனடியாக வெளியிட்டு 1-7-2021 முதல் ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி டேன் டீ தொழிற்சங்கம் சார்பில் குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தாங்கள் வாங்கி வந்த தின கூலியான ரூ.  340 போதாது என பல ஆண்டுகளாகப் போராடி வந்தனர்.

 இந்நிலையில் புதிய ஊதியத்தை தமிழக அரசு  நிர்ணயித்துள்ளதாகவும், அந்த  ஊதியத்தின்  இறுதி அரசாணை வெளியிடப் படாததால் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியம் என்ன என்பதை அரசாணை மூலம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், எல்.பி.எப், சி.ஐ.டி.யூ ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் குன்னூர் புளூஹில்ஸ்லிருந்து  கண்டனப்  பேரணியும், வி.பி. தெருவில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில்  டேன் டீ தொழிலா ளர்கள் 100&க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோல் கோத்தகிரி டேன்டீயில் பணிபுரிந்து வரும் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காமராஜர் சதுக்கத்தில் திரண்டு, கண்டன கோஷங்கள் எழுப்பிய வாறு, போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் ஒய்வூதிய நிலுவைத் தொகை மற்றும் பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விடுததனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com