search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு பரவலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
    X

    பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.

    டெங்கு பரவலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடை பெற்றது.
    • கணேசபுரம் ஆதி திராவிட தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடை பெற்றது. முகாமினை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.எ.கனி தொடங்கி வைத்தார். வார்டு துணை தலைவர் அப்துல் வதூத் தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் அலியார் செய்யது முஹம்மது, சத்தார் அலி,ஞானியார், சலீம் தீன், வக்கீல் ஆரிப் பாட்ஷா, காதர்மீரான்,அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 49-வது பகுதி அனைத்து தெருக்களில், மற்றும் கணேசபுரம் ஆதி திராவிட தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட தலைவர் பக்கீர் முகம்மது லெப்பை, வதூத் செய்தனர்.

    Next Story
    ×