search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் புதிய பல்நோக்கு சமுதாயக்கூடம்
    X

    குன்னூரில் புதிய பல்நோக்கு சமுதாயக்கூடம்

    • ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடத்தினை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்று தரப்படுகின்றன

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உபதலை ஊராட்சி கரிமராஹட்டியில் ரூ.16.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்குச்சி ஊராட்சி ஒன்னதலையில் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடத்தினை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவு, கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்று தரப்படுகின்றன. தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கட்டாயமாக அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒன்னதலை கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு, அரசின் பங்களிப்புடன் ரூ.42.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு சமுதாய கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (எ) மாதன், குன்னூர் சுனிதா நேரு, உபதலை ஊராட்சி தலைவர், கக்குச்சி ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×