search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
    X

    பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

    வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

    • புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்கத்தின் 2023- 24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தன்ராஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் கார்த்திக் மற்றும் பெண்கள் மேம்பாட்டு பிரிவு தலைவர் மீனா சுப்பையா, உதவி ஆளுநர் கிருபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிய தலைவராக டாக்டர். சதீஷ்குமார், செயலாளராக டாக்டர் முருகேசபாண்டியன், பொருளாளராக பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் முருகேசன், முகமது நஜ்முதீன், ராஜ்குமார், பத்ரிநாராயணன், கிருஷ்ணமூர்த்தி, காசி ஜெயராமன், பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பல்வேறு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் செயலாளர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×