search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணம் செலுத்த  புதிய வசதி
    X

    மின் கட்டணம் செலுத்த புதிய வசதி

    • கட்டணங்களை பாரத் பில் பே வாயிலாக செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
    • மின் நுகர்வோர் தங்களது கட்டணத்தை செலுத்த பாரத் பில் பே மற்றுமோர் எளிய வழிமுறையாகும்.

    திருப்பூர் :

    மின் நுகர்வோர் தங்களது கட்டணங்களை பாரத் பில் பே வாயிலாக செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு கூடுதல் வசதியாக பாரத் பில் பே மூலமும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரத் பில் பே என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்டு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (என்.பி.சி.ஐ.,) நிர்வகிக்கப்படும் ஒன்றாகும்.

    மின் நுகர்வோர் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத செயலிகள் மற்றும் இணையதளத்தில் பாரத் பில் பே லோகோவை கிளிக் செய்யவும். அதில் பில் செலுத்தும் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கிளிக் செய்து மின் இணைப்பு விவரங்களைக் கொடுக்க வேண்டும். தகவல்களைச் சரிபார்த்து மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.மின் நுகர்வோர் தங்களது கட்டணத்தை செலுத்த பாரத் பில் பே மற்றுமோர் எளிய வழிமுறையாகும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×