என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு
- நெல்லை வண்ணார்பேட்டை பொறியியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு நடைபெற்றது.
- ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.
நெல்லை, ஜூன். 22-
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு நடைபெற்றது.
சாதிக்க வேண்டிய பாதை
ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டி வேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தரையில் இருந்து வானம் வரை படிப்பது தான் பொறியியல். கல்லூரியின் பொறியியல் துறை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வலியுறுத்தும் கருத்துக்கள், அவர்கள் சாதிக்க வேண்டிய பாதை, பெற்றோர்களை மதிப்பது போன்ற கருத்துக்களை பற்றி பேசினார்.
குறும்பட தொகுப்பு
மேலும் சர்வதேச அளவில் வாழ்வில் சாதனை படைத்தவர்களின் குறும் படத்தொகுப்பை மாண வர்களுக்கு காட்டினார். மாணவர்கள் முயற்சி, பயிற்சி, பேச்சு, மகிழ்ச்சி, வளர்ச்சி என்ற பயணத் தோடு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து எப்.எக்ஸ். கல்லூரியில் சாதனை படைத்த கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் கடின உழைப்பு, சாதனை மற்றும் திறமை போன்றவற்றுக்கு மேடையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிழ்ச்சியில் இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி, இயக்குநர் முகமது சாதிக், திறன் மேம்பாட்டு துறை இயக்குநர் பாலாஜி, ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜஸ்டின், கல்விசார்துறை தலைவர் எல்.ஆர். பிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்