search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  குப்பைக்கு வைத்த தீ சேலையில் பற்றி பெண் கருகி சாவு
    X

    தியாகதுருகம் அருகே குப்பைக்கு வைத்த தீ சேலையில் பற்றி பெண் கருகி சாவு

    • தியாகதுருகம் அருகே குப்பைக்கு வைத்த தீ சேலையில் பற்றி எரிந்ததால் பெண் பலியானார்.
    • புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி வசந்தி (வயது 33) இந்நிலையில் வசந்தி தனது குழந்தைகளுடன் சுப்ரமணியபுரத்தில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வசந்தி வீட்டின் பின்புறம் தோட்டத்தில் உள்ள குப்பைகளை தீயிட்டு எரித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வசந்தியின் சேலையில் தீப்பற்றி எரிந்தது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தி இறந்து போனார்.

    இது குறித்து வசந்தியின் தாய் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×