search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே  என்ஜினீயரிங் மாணவியை   தாக்கிய வாலிபர் மீது வழக்கு
    X

    சேலம் அருகே என்ஜினீயரிங் மாணவியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

    • கூலிதொழிலாளி பாரத் (26) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • இந்த நிலையில் வளர்மதியை பாரத் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நடுவலூரை சேர்ந்தவர் வளர்மதி (வயது 21). இவர் அேத பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டயப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கெங்கவல்லியை சேர்ந்த கூலிதொழிலாளி பாரத் (26) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் குழந்தை இல்லாததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 9 மாதங்களாக கணவரை பிரிந்து, வளர்மதி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் வளர்மதியை பாரத் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த வளர்மதி, கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது குறித்து அவர் அளித்தபுகாரின்பேரில் கெங்கவல்லி போலீசார், பாரத் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×