search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் தனியார் நிறுவனம்  ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
    X

    நாமக்கல் தனியார் நிறுவனம் ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

    • தனியார் நிறுவனத்தில், நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறிய வகை டிராக்டர் வாங்கினார்.
    • ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் உரிய பதிவு செய்யப்பட்ட ஆர்.சி புத்தகமோ, அதன் நகலோ எதுவும் வழங்கப்படவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் வசிப்பவர் வீரமணி. இவரது மனைவி பத்மாவதி. இவர் தனியார் நிறுவனத்தில், நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறிய வகை டிராக்டர் வாங்கினார். நுகர்வோரின் பங்கு தொகையாக ரூ.57 ஆயிரத்து 381 சி.ஏ.ஐ நிறுவனத்திற்கு காசோலை மூலம் செலுத்தப்பட்டது.

    மாதத் தவணைத் தொகை ரூ.6,470 வீதம் 12 காசோ லைகளை பின் தேதியிட்டு பெற்றுக் கொண்ட நிதி நிறுவனம், பத்மாவதி கணவர் வீரமணியிடம் 10 காசோலைகளை பின் தேதியிட்டு பெற்றுக் கொண்டனர்.

    2011 ஜனவரியில் டிராக்டர் கொடுத்தபோது எவ்வித ரசீதும் வழங்கவில்லை. பலமுறை நேரில் சென்று ஆவணங்களை கேட்ட போது அரசு இந்த டிராக்டருக்கு ரூ.80 ஆயிரம் மானியம் பெற்று கணக்கில் வரவு வைத்துக்கொண்டு பின்னர் ஆவணங்களை தருவதாக நிதி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

    ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் உரிய பதிவு செய்யப்பட்ட ஆர்.சி புத்தகமோ, அதன் நகலோ எதுவும் வழங்கப்–படவில்லை. ஆர்.சி என்டாஸ்மெண்ட் செலவுக்கு ரூ.3000 பெற்றுக் கொண்டு அதற்கு ரசீதும் கொடுக்கவில்லை.

    அரசு மானியம் பெற்று தருவதாக கூறி நுகர்வோரின் நில ஆவணங்களை பெற்றுக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் நிதி நிறுவனம் எடுக்கவில்லை. கடன் முழுவதும் கட்டி முடித்தும் ஆர்.சி புத்தகத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து 2013-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நாமக்கல் பயனீட்டாளர் சங்கம் மூலம் வழக்கு தொடரப்பட்டது.

    விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம் எதிர் முறையீட்டாளர்கள் இருவரும் சேர்ந்து முறையீட்டாளருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், மன உளைச்சல் இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவாக ரூ.10,000 வழங்கவும் உத்தரவிட்டது.

    Next Story
    ×