search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட போலீசாரை படத்தில் காணலாம்.

    குமாரபாளையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • குமாரபாளையம் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • நகரில் சந்தேகப்படும் வகையில் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    குமாரபாளையம்:

    பொதுமக்களிடையே அச்ச உணர்வை போக்கும் விதத்தில் குமாரபாளையம் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இன்ஸ்பெக்டர் தவமணி விழிப்புணர்வு வழங்கினார்.

    அப்போது நகரில் சந்தேகப்படும் வகையில் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்க நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரவு நேரங்களில் உங்கள் பகுதிகளில் சந்தேகப் படும்படியான வாகனங்கள் இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புதிதாக வாடகைக்கு வரும் நபர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு வரும் நபர்களின் ஆதார் அட்டை நகல், போன் நம்பர் ஆகிய வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×